நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல் 

கோலாலம்பூர்: 

அரச மலேசிய காவல் படையின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதியோடு நிறைவடைகிறது என்று நடப்பு ஐ.ஜி.பி டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார் 

பணி ஒப்படைப்பு சடங்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தகவல் அளித்தார். 

தனது பணி காலத்தை அவர் நீடிக்க விரும்பவில்லை என்று மலாய் நாளிதழான சினார் ஹாரியான் செய்தியை வெளியிட்டிருந்தது 

இந்த முடிவு குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார். 

ஐ.ஜிபி பதவி காலத்தைத் தாம் நீடிக்க போவதில்லை. இரு வருடங்களாக ஐ.ஜி.பியாக பணியாற்றியது போதுமானதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset