நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்எஸ்டி வரி விரிவாக்கம் நீண்ட கால வணிக வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வழிவகுக்குகிறது: டாக்டர் ஹேமலா

கோலாலம்பூர்:

எஸ்எஸ்டி வரி விரிவாக்கம் நீண்ட கால வணிக வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வழிவகுக்குகிறது.

மைக்கியின் மகளிர் பிரிவுத் தலைவர் டாக்டர் ஹேமலா ஏ.பி. சிவம் இதனை கூறினார்.

எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை, சேவை வரி விரிவாக்கம் வரும் ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

இந்த வரி விரிவாக்கம் வணிகங்கள், குறிப்பாக பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள்  செயல்பாடுகளை வலுப்படுத்தும்.

நீண்ட கால மீள்தன்மையை உருவாக்க  சரியான நேரத்தில் எடுக்கப்படும் மூலோபாய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

அரசாங்கத்தின் முடிவு வணிக சமூகத்தின் நடைமுறைத் தேவைகளுடன் நிதி இலக்குகளை சமநிலைப்படுத்தும்.

மேலும் இந்த நடவடிக்கை, குறிப்பாக பெண்கள் தலைமையிலான வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும், தங்கள் பணியாளர்களை மறுதிறன் செய்யவும், எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்களை மறுசீரமைக்கவும் வழிவகுக்கிறது.

அதே வேளையில் பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், ஆட்டோமேஷனில் முதலீடு செய்யவும், இலக்கவியல் கருவிகளைப் பயன்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பொருளாதார, பராமரிப்பு பொறுப்புகளை சமநிலைப்படுத்தும் பெண் தொழில்முனைவோருக்கு,

அவர்கள் நிலையான வளர்ச்சிக்காகத் தேவையான கொள்கை தெளிவு, கட்டமைக்கப்பட்ட இடத்தை வழங்குகிறது என்று ஹேமலா கூறினார்.

முன்னதாக நீண்ட கால நிதி நிலைத்தன்மையை ஆதரிக்கும் வகையில் தேசிய வருவாயை மேம்படுத்தவும் வரி தளத்தை விரிவுபடுத்தவும் அரசாங்கம் ஜூலை 1 முதல் எஸ்எஸ்டி திருத்தம், விரிவாக்கத்தை செயல்படுத்தும்.

இது அத்தியாவசியப் பொருட்களுக்கான விற்பனை வரி விகிதம் மாறாமல் இருக்கும்.

அத்தியாவசியமற்ற அல்லது விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு ஐந்து அல்லது 10 சதவீத விகிதம் பொருந்தும் என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset