
செய்திகள் மலேசியா
கிட்டத்தட்ட 7,000 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதவில்லை என்பதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது: பாப்பாராயுடு
பெட்டாலிங்ஜெயா:
கிட்டத்தட்ட 7,000 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதவில்லை என்பதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.
டான்ஸ்ரீ தம்பிராஜா சிந்தனையில் உருவாகிய ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சியை செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் எஸ்பிஎம் மாணவர்களுக்காக கருத்தரங்கை நடத்தியது.
இந்த கருத்தரங்கு மிகவும் முக்கியமானது. காரணம் எஸ்பிஎம் தேர்வின் முக்கியத்துவத்தை இப்போதே மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்தாண்டு கிட்டத்தட்ட 7,000 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதவில்லை.
குறிப்பாக நமது மாணவர்கள் நன்னெறி சோதனையில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.
இதுபோன்ற விவகாரங்களில் அலட்சியம் காட்டினால் எதிர்காலத்தில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்.
இந்திய மாணவர்களை வெற்றிக்கு கல்வியே அடித்தளம். இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதன் அடிப்படையில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இக்கல்வி சேவை தொடர வேண்டும் என்று பாப்பாராயுடு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am