
செய்திகள் மலேசியா
200 மாணவர்களுக்கான வசதிக் கொண்ட மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தங்கும் விடுதியில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே தங்கியுள்ளனர்: உதயசூரியன்
ஷாஆலம்:
200 மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியை மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி கொண்டிருக்கிறது.
ஆனால் இப்போது 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே தங்கி படிக்கின்றனர் என்று பள்ளி வாரியக் குழு தலைவர் உதயசூரியன் கூறினார்.
நாட்டில் ஒரு நவீன தமிழ்ப்பள்ளியாக விளங்கும் மிட்லண்ட்ஸ் தமிழ்பள்ளி 90 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
அப்போது சிலாங்கூர் மாநில அரசு 30 லட்சம் ரிங்கிட்டை நிதியாக வழங்கி பேருதவி புரிந்தது.
மொத்தம் 18 வகுப்பறைகள் கொண்ட இந்த பள்ளி அரசாங்க உதவி பெறும் பள்ளியாகும்.
அதே வேளையில் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மட்டுமே நாட்டில் மாணவர் தங்கும் விடுதியை கொண்ட பள்ளியாகும்.
200 மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியை இந்த மாணவர் தங்கும் விடுதி கொண்டிருக்கிறது.
ஆனால் தற்போது 20 மாணவர்கள் மட்டுமே இங்கு தங்கி படிக்கிறார்கள்.
இத்தகவல் அதிர்ச்சியை தந்தாலும் இது தான் உண்மை.
இதனால் தங்கும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்த கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர் எண்ணிக்கை சவாலாக இருந்தாலும் தங்கும் விடுதியின் பராமரிப்பு செலவும் பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.
ஆக இம்மாணவர் தங்கும் விடுதியை பராமரிக்க சிலாங்கூர் மாநில அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.
அதே வேளையில் வசதிக் குறைந்த குடும்பங்கள் தங்களின் பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்பலாம்.
அவர்களுக்கு வழிக்காட்ட நாங்கள் தயாராக உள்ளோம் என்று உதயசூரியன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am