நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் ஊழல் எதிர்ப்பு பேரணி: ஜூன் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது 

கோலாலம்பூர்: 

நீண்ட கால கழக சீர்த்திருத்தத்தை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் ஜூன் 28ஆம் தேதி கோலாலம்பூரில் ஊழல் எதிர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. 

HIMPUNAN RAKYAT BENCI RASUAH எனும் பேரணி தலைநகர் சோகோ பேரங்காடியின் முன்புறம் மதியம் 2.30 மணியளவில் நடைபெறும் 

இந்த ஊழல் எதிர்ப்பு பேரணியை RAKYAT BENCI RASUAH தலைமை செயலகத்தினர் வழிநடத்துவர் என்று தெரிவிக்கப்பட்டது. 

ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் தொடங்கும் இந்த பேரணி டாத்தாரான் மெர்டேக்கா வரை மேற்கொள்ளப்படும். 

இந்த அமைதியான பேரணி அரசியல் செயல்திறனை சுத்தம் செய்யும் உருமாற்ற நடவடிக்கைகள் அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்பதே வலியுறுத்துவதாகும். 

மலேசியர்கள் அனைவரும் இந்த ஊழல் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளலாம் என்று ஏற்பாட்டு குழு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset