நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஈரான் திட்டமா ? மார்கோ ரூபியோ எச்சரிக்கை 

வாஷிங்டன்: 

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்த திட்டம் கொண்டிருப்பதால் ஈரானை அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை செய்வதாக அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார். 

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் இராணுவ மையங்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. 

ஈரான் நாட்டிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா  ஈடுபடவில்லை என்றும் அமெரிக்காவின் இராணுவ படைகளைக் காப்பதே எங்களின் பிரதான நோக்கமாகும் என்று ரூபியோ ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவிவித்தார். 

முன்னதாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அனு ஆயுத திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை அமெரிக்கா, ஈரான் தரப்புக்கு இடையில் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset