நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு 

தெஹ்ரான்: 

ஈரான் மீது இஸ்ரேல் படையினர் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவுக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இஸ்ரேல் உடனடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக கடந்த மாதம் தகவல் வெளியாகி இருந்தது. 

ஈரானின் இதயமாக கருதப்படும் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்த சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்தால், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நாங்கள் காரணமல்ல என்று  அமெரிக்கா தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset