நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் ஜாவா விவகாரம்: வன்முறையை குற்றச்சாட்டுகளை WCE நிராகரித்தது

கோலாலம்பூர், 

கிள்ளான் மாவட்டத்திலுள்ள கம்போங் ஜாவா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேற்குக் கரையோர நெடுஞ்சாலை (West Coast Expressway – WCE) திட்டத்துடன் தொடர்புடைய நிலத்தை கையப்படுத்தும் நடவடிக்கையில் அங்குள்ள பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட வன்முறை, சட்டவிரோத நபர்களின் தலையீடு ஆகிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மையற்றவை என WCE திட்டக்குழுத் திட்டவட்டமாகக் கூறியது.

நிலத்தை கையக்கப்படுத்துதல்  என்பது அரசாங்கத்தால் பொதுப் பயன்பாட்டிற்காக தனியார் நிலங்களை சட்டப்படி பெறும் நடைமுறை ஆகும். இத்திட்டத்தில், கம்போங் ஜாவாவில் உள்ள நிலங்கள், மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்டம் மேற்கொள்வதற்காக சட்டப்படி கைப்பற்றப்பட்டு, உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்தது.

RM 9.8 மில்லியன் இழப்பீடு

அறிக்கையின் படி, 2023 செப்டம்பர் 30 வரை, நில உரிமையாளர்களுக்கு மொத்தமாக RM9.8 மில்லியன் இழப்பீடு வழங்கத் தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதில் 75 விழுக்காடு அதாவது RM7.4 மில்லியன் தொகை, முன்னமே 33 உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

நிலம் கையக்கப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 16 படி, 75% இழப்பீடு வழங்கப்பட்டவுடன், அந்த நிலம் அரசு சொத்தாக மாறுகிறது. அதன் அடிப்படையில் அதன் பிறகு, நில உரிமையாளர்களுக்கு அந்த நிலத்தின் மீதுள்ள உரிமைகள் செல்லாது,” என்று நிறுவனம் தெரிவித்தது.

அதே நேரத்தில், சில நில உரிமையாளர்கள் நிலத்தை காலி செய்ய மறுத்து வருகிறார்கள் என்பது போன்றதொரு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது. 

நியாயமான அணுகுமுறை

“அவர்களது நிலம், முறையான சட்டச் செயல்முறைகளின் அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. வன்முறை, சட்டவிரோத நபர்களின் தலையீடு ஆகியவை குறித்து பரவியுள்ள புகார்கள் உண்மையற்றவை,” என்று அறிக்கையில் கூறப்பட்டது.

அதோடு இத்திட்டம் சட்டப்படி, வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும், பொதுமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் WCE நிறுவனம், தமது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

- இது West Coast Expressway – WCE நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset