
செய்திகள் மலேசியா
கம்போங் ஜாவா விவகாரம்: வன்முறையை குற்றச்சாட்டுகளை WCE நிராகரித்தது
கோலாலம்பூர்,
கிள்ளான் மாவட்டத்திலுள்ள கம்போங் ஜாவா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேற்குக் கரையோர நெடுஞ்சாலை (West Coast Expressway – WCE) திட்டத்துடன் தொடர்புடைய நிலத்தை கையப்படுத்தும் நடவடிக்கையில் அங்குள்ள பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட வன்முறை, சட்டவிரோத நபர்களின் தலையீடு ஆகிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மையற்றவை என WCE திட்டக்குழுத் திட்டவட்டமாகக் கூறியது.
நிலத்தை கையக்கப்படுத்துதல் என்பது அரசாங்கத்தால் பொதுப் பயன்பாட்டிற்காக தனியார் நிலங்களை சட்டப்படி பெறும் நடைமுறை ஆகும். இத்திட்டத்தில், கம்போங் ஜாவாவில் உள்ள நிலங்கள், மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்டம் மேற்கொள்வதற்காக சட்டப்படி கைப்பற்றப்பட்டு, உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்தது.
RM 9.8 மில்லியன் இழப்பீடு
அறிக்கையின் படி, 2023 செப்டம்பர் 30 வரை, நில உரிமையாளர்களுக்கு மொத்தமாக RM9.8 மில்லியன் இழப்பீடு வழங்கத் தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதில் 75 விழுக்காடு அதாவது RM7.4 மில்லியன் தொகை, முன்னமே 33 உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
நிலம் கையக்கப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 16 படி, 75% இழப்பீடு வழங்கப்பட்டவுடன், அந்த நிலம் அரசு சொத்தாக மாறுகிறது. அதன் அடிப்படையில் அதன் பிறகு, நில உரிமையாளர்களுக்கு அந்த நிலத்தின் மீதுள்ள உரிமைகள் செல்லாது,” என்று நிறுவனம் தெரிவித்தது.
அதே நேரத்தில், சில நில உரிமையாளர்கள் நிலத்தை காலி செய்ய மறுத்து வருகிறார்கள் என்பது போன்றதொரு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
நியாயமான அணுகுமுறை
“அவர்களது நிலம், முறையான சட்டச் செயல்முறைகளின் அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. வன்முறை, சட்டவிரோத நபர்களின் தலையீடு ஆகியவை குறித்து பரவியுள்ள புகார்கள் உண்மையற்றவை,” என்று அறிக்கையில் கூறப்பட்டது.
அதோடு இத்திட்டம் சட்டப்படி, வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும், பொதுமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் WCE நிறுவனம், தமது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
- இது West Coast Expressway – WCE நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 11:07 pm
மூன்று நிலைகளைக் கடந்து தான் மித்ரா மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன: பிரபாகரன்
June 13, 2025, 11:06 pm
13ஆவது மலேசியத் திட்டம்; சமூக, பொருளாதார இடைவெளியைக் குறைக்கும்: பிரதமர்
June 13, 2025, 11:05 pm
யூசோப் ராவ்தர் வழக்கின் தீர்ப்பை போலிஸ் மறுபரிசீலனை செய்யும்: ஐஜிபி
June 13, 2025, 11:04 pm
யூசோப் ராவ்தர் வழக்கில் பிரதமரிடம் வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை: ஐஜபி
June 13, 2025, 5:23 pm
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: பேருந்து ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
June 13, 2025, 4:12 pm
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்: வேதகுமார்
June 13, 2025, 3:37 pm
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாடு கருவி சோதனை கட்டாயம்: அந்தோனி லோக்
June 13, 2025, 3:36 pm
காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்
June 13, 2025, 3:35 pm
ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும்: பிரதமர் அன்வார் தகவல்
June 13, 2025, 3:19 pm