
செய்திகள் மலேசியா
உப்சி மாணவர்களை உட்படுத்திய சாலை விபத்து: பேருந்து ஓட்டுநர் கைது
தஞ்சோங் மாலிம்:
உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்களை உட்படுத்திய சாலை விபத்தில் பேருந்து ஓட்டுநர் நேற்று கிரிக் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் நோர்டின் இந்த கைது சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இல்லம் திரும்ப அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் கிரிக் போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார் என்று அவர் சொன்னார்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 15 உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகினர்.
தியாகத்திருநாள் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு திரெங்கானு மாநிலத்திலிருந்து தஞ்சோங் மாலிம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
பேருந்தில் மொத்தமாக இருந்த 44 பேரில் 15 பேர் மரணமடைந்த வேளையில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 11:07 pm
மூன்று நிலைகளைக் கடந்து தான் மித்ரா மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன: பிரபாகரன்
June 13, 2025, 11:06 pm
13ஆவது மலேசியத் திட்டம்; சமூக, பொருளாதார இடைவெளியைக் குறைக்கும்: பிரதமர்
June 13, 2025, 11:05 pm
யூசோப் ராவ்தர் வழக்கின் தீர்ப்பை போலிஸ் மறுபரிசீலனை செய்யும்: ஐஜிபி
June 13, 2025, 11:04 pm
யூசோப் ராவ்தர் வழக்கில் பிரதமரிடம் வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை: ஐஜபி
June 13, 2025, 5:23 pm
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: பேருந்து ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
June 13, 2025, 4:12 pm
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்: வேதகுமார்
June 13, 2025, 3:37 pm
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாடு கருவி சோதனை கட்டாயம்: அந்தோனி லோக்
June 13, 2025, 3:36 pm
காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்
June 13, 2025, 3:35 pm
ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும்: பிரதமர் அன்வார் தகவல்
June 13, 2025, 3:19 pm