நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உப்சி மாணவர்களை உட்படுத்திய சாலை விபத்து: பேருந்து ஓட்டுநர் கைது 

தஞ்சோங் மாலிம்: 

உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்களை உட்படுத்திய சாலை விபத்தில் பேருந்து ஓட்டுநர் நேற்று கிரிக் பகுதியில் கைது செய்யப்பட்டார். 

பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் நோர்டின் இந்த கைது சம்பவத்தை உறுதிப்படுத்தினார். 

தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இல்லம் திரும்ப அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் கிரிக் போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார் என்று அவர் சொன்னார். 

கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 15 உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகினர். 

தியாகத்திருநாள் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு திரெங்கானு மாநிலத்திலிருந்து தஞ்சோங் மாலிம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. 

பேருந்தில் மொத்தமாக இருந்த 44 பேரில் 15 பேர் மரணமடைந்த வேளையில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset