நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு

அகமதாபாத்: 

ஏர் இந்தியா விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரும் மரணமடைந்தனர்.

உள்ளூர் போலிஸ் துறை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.

242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று பிற்பகல் அகமதாபாத் நகரின் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மெகானி பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விபத்து குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், 

அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.

பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர்,  7 பேர் போர்த்துகல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பேரும் உயிரிழந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset