
செய்திகள் மலேசியா
10,000 தொழிலாளர்களுக்கு பணியிட முதலுதவி திறன்களை மனிதவள அமைச்சு பயிற்றுவிக்கும்: ஸ்டீவன் சிம்
ஜெனிவா:
10,000 தொழிலாளர்களுக்கு பணியிட முதலுதவி திறன்களை மனிதவள அமைச்சு பயிற்றுவிக்கும்.
அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
தொழிலாளர்களுக்கு அடிப்படை முதலுதவி திறன்களுடன் பயிற்சி அளிக்கும் முயற்சியைத் தொடங்கப்படும்.
இதம் மூலம் தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாடு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.
மனிதவள அமைச்சு, மலேசிய செஞ்சிலுவைச் சங்கம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ரெட் கிரசென்ட் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும்
இந்த ஒத்துழைப்பின் மூலம் இம்முயற்சி உறுதி செய்யப்பட்டது.
மேலும் இது பணியிடத்திலும் சமூகத்திலும் அவசர நிலைகளை எதிர்கொள்ள தொழிலாளர்களின் தயார் நிலையை வலுப்படுத்தும்.
ஜெனிவாவில் உள்ள ரெட் கிரசென்ட் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையகத்திற்கு அதிகாரப்பூர்வமாக வருகை புரிந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
உற்பத்தி, முதன்மைத் தொழில்கள் போன்ற அதிக ஆபத்துள்ள துறைகளில் கவனம் செலுத்தி, எச்ஆர்டி கோர்ப், நியோஸ் எனப்படும் தேசிய தொழில் பாதுகாப்பு, சுகாதார நிறுவனம் மூலம் இப்பயிற்சி செயல்படுத்தப்படும்.
பணியிட முதலுதவி பாடநெறி வெறும் தொழில்நுட்ப பயிற்சி மட்டுமல்ல.
ஊழியர்களை மேம்படுத்துவதற்கும் தேசிய பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் ஒரு முயற்சியாகும் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 5:23 pm
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: பேருந்து ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
June 13, 2025, 4:12 pm
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்: வேதகுமார்
June 13, 2025, 3:37 pm
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாடு கருவி சோதனை கட்டாயம்: அந்தோனி லோக்
June 13, 2025, 3:36 pm
காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்
June 13, 2025, 3:35 pm
ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும்: பிரதமர் அன்வார் தகவல்
June 13, 2025, 3:19 pm
மலாக்காவில் தாய், அண்ணனைக் கொலை செய்த இளைஞருக்கு ஒரு வாரம் தடுப்பு காவல் விதிப்பு
June 13, 2025, 3:00 pm