நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்

கோலாலம்பூர்:

இந்தியாவின் அகமதாபாத் அருகே இன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.

பிரதமர் தனது முகநூல் பதவில், மலேசிய அரசாங்கம், மக்களின் சார்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளான செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்த இழப்பு குறித்து இந்தியாவின் துயரத்தை மலேசியா பகிர்ந்து கொள்ளும்.

மேலும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் மலேசியா முழு ஒத்துழைப்பை தரும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள், இந்த இழப்பால் துக்கப்படுபவர்களுடன் நாங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்வோம்  என்று அவர் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset