நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

 உள்ளூர் ராப் பாடகர் உட்பட மூன்று மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தியுள்ளனர்: போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை

செய்தி 13:

கோலாலம்பூர்: 

103 போதை பொருள் பாக்கெட்டுகளைக் கடத்த முயன்ற உள்ளூர் ராப் பாடகர் உட்பட மூன்று மலேசியர்கள் லாவோஸீன் கைது செய்யப்பட்டதை அரச மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியது. 

மே 27-ஆம் தேதி தாய் ஏர்வேஸ் விமானத்தில் மலேசியாவிலிருந்து வந்த பின் லாவோஸில் உள்ள வாட்டே சர்வதேச விமான நிலையத்தில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

போதை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) துணை ஆணையர் Mat Zani @ Mohd Salahuddin Che Ali தெரிவித்தார்.

போதைப் பொருள் மலேசியா அல்லது தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset