
செய்திகள் மலேசியா
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
கோலாலம்பூர்:
மலேசியாவில் மொத்தம் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 13 சதவீதம் பேர் இணையத்தில் மற்றவர்களை கொடுமைப்படுத்தியுள்ளனர் என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலேஹா முஸ்தபா இதனை கூறினார்.
இணைய பகடிவதை புள்ளி விவரங்கள் மிகவும் கவலையை அளிக்கிறது.
குறிப்பாக பள்ளி மாணவர்களின் மன ஆரோக்கியம், பாதுகாப்பிற்கு இலக்கவியல் உலகம் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை எவ்வளவு தீவிரமாக இருப்பதை பிரதிபலிக்கிறது.
கூட்டரசுப் பிரதேசங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பொறுப்பான ஒரு தாய், பாட்டி, அமைச்சராக இருக்கும் நான் இவ்விவகாரம் குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்.
செந்தூல் தம்புசாமி தமிழ்ப்பள்ளியில் மித்ராவின் பள்ளி மாணவர்களுக்கான இணைய பாதுகாப்புத் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இணைய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் இந்தத் திட்டம் ஒரு முக்கியமான முயற்சியாகும்.
குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே சைபர் மிரட்டல், பாலியல் துன்புறுத்தல், தனியுரிமை மீதான படையெடுப்பு போன்ற இணைய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள்.
2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம், இன்டர்ப்ல், எக்பாட் ஆகியவற்றின் அறிக்கையின் அடிப்படையில்,
மலேசியாவில் 12 முதல் 17 வயதுடைய 100 இளைஞர்களில் நான்கு பேர் ஒரு வருடத்திற்குள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆக இதுபோன்ற முயற்சிகள் கட்டாயமானதாக கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 5:23 pm
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: பேருந்து ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
June 13, 2025, 4:12 pm
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்: வேதகுமார்
June 13, 2025, 3:37 pm
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாடு கருவி சோதனை கட்டாயம்: அந்தோனி லோக்
June 13, 2025, 3:36 pm
காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்
June 13, 2025, 3:35 pm
ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும்: பிரதமர் அன்வார் தகவல்
June 13, 2025, 3:19 pm
மலாக்காவில் தாய், அண்ணனைக் கொலை செய்த இளைஞருக்கு ஒரு வாரம் தடுப்பு காவல் விதிப்பு
June 13, 2025, 3:00 pm