நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா

கோலாலம்பூர்:

மலேசியாவில் மொத்தம் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 13 சதவீதம் பேர் இணையத்தில்  மற்றவர்களை கொடுமைப்படுத்தியுள்ளனர் என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலேஹா முஸ்தபா இதனை கூறினார்.

இணைய பகடிவதை புள்ளி விவரங்கள் மிகவும் கவலையை அளிக்கிறது.

குறிப்பாக பள்ளி மாணவர்களின் மன ஆரோக்கியம்,  பாதுகாப்பிற்கு இலக்கவியல் உலகம் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை எவ்வளவு தீவிரமாக இருப்பதை  பிரதிபலிக்கிறது.

கூட்டரசுப் பிரதேசங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பொறுப்பான ஒரு தாய், பாட்டி, அமைச்சராக இருக்கும் நான் இவ்விவகாரம் குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்.

செந்தூல் தம்புசாமி தமிழ்ப்பள்ளியில் மித்ராவின் பள்ளி மாணவர்களுக்கான இணைய பாதுகாப்புத் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இணைய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் இந்தத் திட்டம் ஒரு முக்கியமான முயற்சியாகும்.

குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே சைபர் மிரட்டல், பாலியல் துன்புறுத்தல், தனியுரிமை மீதான படையெடுப்பு போன்ற இணைய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள்.

2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம், இன்டர்ப்ல்,  எக்பாட் ஆகியவற்றின் அறிக்கையின் அடிப்படையில்,

மலேசியாவில்  12 முதல் 17 வயதுடைய 100 இளைஞர்களில் நான்கு பேர் ஒரு வருடத்திற்குள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆக இதுபோன்ற முயற்சிகள் கட்டாயமானதாக கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset