
செய்திகள் மலேசியா
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
கிள்ளான்:
கம்போங் ஜாவா லோட் 11113 மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் சுரேந்திரன் இதனை வலியுறுத்தினார்.
கிட்டத்தட்ட 19 பேருக்கு சொந்தமான நிலத்தில் தற்போது நெடுஞ்சாலை நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால் இவ்விடத்தை காலி செய்ய சொல்லி நெடுஞ்சாலை நிறுவனம் இழப்பிடு கொடுத்துள்ளது.
இந்த இழப்பீடு நியாயமானது அல்ல அன்று இங்குள்ள மக்கள் அப்பணத்தை வழக்கறிஞரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கு என்பதால் அதை பற்றி நான் அதிகம் பேசவில்லை.
ஆனால் வீடுகளை காலி செய்ய சொல்லி மூன்றாம் தரப்பினரை நியமிப்பதும் இங்குள்ள மக்களை அச்சுறுத்துவதும் மிகப் பெரிய தவறாகும்.
குறிப்பாக இங்குள்ள மக்களை தாக்குவது மிகப் பெரிய குற்றமாகும்.
ஆக இப்பிரச்சினைக்கு போலிசார் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். குறிப்பாக போலிஸ் இப்பகுதி மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.
இதுவே பிபிபி கட்சியின் வேண்டுகோள் என்று சுரேந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 5:23 pm
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: பேருந்து ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
June 13, 2025, 4:12 pm
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்: வேதகுமார்
June 13, 2025, 3:37 pm
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாடு கருவி சோதனை கட்டாயம்: அந்தோனி லோக்
June 13, 2025, 3:36 pm
காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்
June 13, 2025, 3:35 pm
ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும்: பிரதமர் அன்வார் தகவல்
June 13, 2025, 3:19 pm
மலாக்காவில் தாய், அண்ணனைக் கொலை செய்த இளைஞருக்கு ஒரு வாரம் தடுப்பு காவல் விதிப்பு
June 13, 2025, 3:00 pm