
செய்திகள் மலேசியா
31.4 பில்லியன் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்; 5 ஆண்டுகளில் 5,703 நபர்கள் கைது: எம்ஏசிசி
புத்ராஜெயா:
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 31.4 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளை எம்ஏசிசி பறிமுதல் செய்துள்ளது.
அதே வேளையில் 5,703 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
எம்ஏசிசி ஊழல் குற்றங்களை முழுமையாக எதிர்த்துப் போராடுவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் கடந்த 2020 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை கிட்டத்தட்ட 34,819 புகார்களை எம்ஏசிசி பெற்றது.
இதில் 3.5 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளை எம்ஏசிசி முடக்கியுள்ளது. மேலும் 28 பில்லியன் ரிங்கிட் சொத்துகளை எம்ஏசிசி பறிமுதல் செய்துள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு 31.4 பில்லியன் ரிங்கிட்டாகும்.
அதே காலகட்டத்தில், 5,703 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 5,145 பேர் மீது விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டன.
இது நாட்டின் முக்கிய அமலாக்க அமைப்பாக எம்ஏசிசியின் பங்கிற்கு ஏற்ப நேர்மையையும் சட்டத்தையும் நிலைநிறுத்துவதில் ஏஜென்சியின் உயர் அர்ப்பணிப்பை இந்த சாதனை நிரூபித்துள்ளதாக என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 5:23 pm
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: பேருந்து ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
June 13, 2025, 4:12 pm
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்: வேதகுமார்
June 13, 2025, 3:37 pm
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாடு கருவி சோதனை கட்டாயம்: அந்தோனி லோக்
June 13, 2025, 3:36 pm
காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்
June 13, 2025, 3:35 pm
ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும்: பிரதமர் அன்வார் தகவல்
June 13, 2025, 3:19 pm
மலாக்காவில் தாய், அண்ணனைக் கொலை செய்த இளைஞருக்கு ஒரு வாரம் தடுப்பு காவல் விதிப்பு
June 13, 2025, 3:00 pm