
செய்திகள் மலேசியா
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கம்போங் ஜாவா மக்களுக்கு இரண்டு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும்: டத்தோ சங்கர் ஐயங்கார்
கிள்ளான்:
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கம்போங் ஜாவா மக்களுக்கு இரண்டு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும்.
சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கார் இதனை கூறினார்.
கம்போங் ஜாவா லோட் 11113 மக்களின் வீடமைப்பு பிரச்சினை நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக இம்மக்களின் போராட்டம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.
அதற்குள் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை நிறுவனம் குத்தகையாளரை நியமித்து வீட்டை உடைக்க முயன்றுள்ளது.
இது தான் தற்போதை பிரச்சினையாகும். மக்கள் இந்த வீடுகளை காலி செய்ய தயாராக உள்ளனர்.
ஆனால் நியாயமான இழப்பீட்டை கோரி தான் இம்மக்கள் போராடி வருகின்றனர்.
ஆக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை நிறுவனம் வழக்கு முடியும் வரை இம்மக்களுக்கு இரண்டு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்.
இது தொடர்பில் நெடுஞ்சாலை நிறுவனத்திற்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆக நெடுஞ்சாலை நிறுவனம் உரிய முடிவைமுடிவை எடுக்க வேண்டும் என்று டத்தோ சங்கர் ஐயங்கார் கூறினார்.
இதனிடையே கம்போங் ஜாவா மக்களின் போராங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் தான் நாங்கள் இவ்விடத்திற்கு வருகை தந்துள்ளோம்.
மக்களின் போராட்டம் நியாயமானது. அதே வேளையில் அவர்கள் வெளியேறுவதற்கும் உரிய அவகாசத்தை நெடுஞ்சாலை நிறுவனம் வழங்க வேண்டும்.
அதை விடுத்து வன்முறையை கையாள்வது பிரச்சினைக்கு தீர்வாகாது என மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ வி. குணாளன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 5:23 pm
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: பேருந்து ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
June 13, 2025, 4:12 pm
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்: வேதகுமார்
June 13, 2025, 3:37 pm
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாடு கருவி சோதனை கட்டாயம்: அந்தோனி லோக்
June 13, 2025, 3:36 pm
காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்
June 13, 2025, 3:35 pm
ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும்: பிரதமர் அன்வார் தகவல்
June 13, 2025, 3:19 pm
மலாக்காவில் தாய், அண்ணனைக் கொலை செய்த இளைஞருக்கு ஒரு வாரம் தடுப்பு காவல் விதிப்பு
June 13, 2025, 3:00 pm