நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேருந்து நடத்துநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்: அந்தோனி லோக் 

கிரிக்:

உப்சி கல்வியியல் மாணவர்கள் பயணம் செய்த பேருந்து நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.  

அப்பேருந்து நிறுவனத்திற்கு எதிராக சாலைப் போக்குவரத்துத் துறை விசாரணை அறிக்கையைத் திறக்கும் என்று அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார். 

பேருந்து நிறுவனம் அதன் செயல்பாடுகளை பொறுப்புடன் நிர்வகிக்கத் தவறியதற்காக வழக்குத் தொடரப்படலாம் என்று அமைச்சர் கூறினார்.

ஓட்டுநரின் வழக்கு காவல்துறை அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. 

காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது குற்றம் சாட்டப்படுமா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.

இருப்பினும், செயல்பாட்டு அலட்சியத்திற்காக நிறுவனம் மீது வழக்குத் தொடரப்படலாம். 

இதற்கு முன்னர் பேருந்து நடத்துநர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

சாலைப் போக்குவரத்துத் துறை விசாரணை அறிக்கையை நிறைவு செய்து அதனைச் சட்டத்துறை அலுவலகததில் சமர்ப்பிக்கும் என்று தாம் நம்புவதாக அந்தோனி லோக் கூறினார்.

பேருந்தை மூன்றாம் தரப்பினருக்குக் குத்தகைக்கு வழங்கியிருப்பது கண்டறியப்பட்டதையும் அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset