
செய்திகள் மலேசியா
கிரிக் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்படும்: நந்தா லிங்கி
கிரிக்:
கிரிக் - ஜெலி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்படும் எனறு பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
தற்போதைய நெடுஞ்சாலையின் நிலை குறித்து மதிப்பீடு அறிக்கையைத் தனது தரப்பு செய்து வருவதையும் நந்தா லிங்கி உறுதிப்படுத்தினார்.
நெடுஞ்சாலை நிலையை மதிப்பீடு செய்ய மல்டி-லேசர், டெஃப்ளெக்டோமீட்டர், பெனட்ரோமீட்டர் மற்றும் ட்ரையல் பிட் போன்ற நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
நெடுஞ்சாலை நிலையின் மதிப்பீடு மார்ச் 13-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை நடைபெற்றது.
கிரிக்-ஜெலி பாதையை மேம்படுத்த, குறிப்பாக FT04 ஃபெடரல் சாலையில், 2023 முதல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நந்தா கூறினார்.
நெடுஞ்சாலையின் நல்ல நிலையை உறுதி செய்வதற்காக, காலமுறை நடைபாதை பராமரிப்பு திட்டத்தின் கீழ் 55 பணிகளுக்கு மொத்தம் RM80 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.
மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் பணி ஆணை ஒப்புதல் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am