நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிரிக் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்படும்: நந்தா லிங்கி 

கிரிக்: 

கிரிக் - ஜெலி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்படும் எனறு பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார். 

தற்போதைய நெடுஞ்சாலையின் நிலை குறித்து மதிப்பீடு அறிக்கையைத் தனது தரப்பு செய்து வருவதையும் நந்தா லிங்கி உறுதிப்படுத்தினார். 

நெடுஞ்சாலை நிலையை மதிப்பீடு செய்ய மல்டி-லேசர், டெஃப்ளெக்டோமீட்டர், பெனட்ரோமீட்டர் மற்றும் ட்ரையல் பிட் போன்ற நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

நெடுஞ்சாலை நிலையின் மதிப்பீடு மார்ச் 13-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. 

கிரிக்-ஜெலி பாதையை மேம்படுத்த, குறிப்பாக FT04 ஃபெடரல் சாலையில், 2023 முதல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நந்தா கூறினார்.

நெடுஞ்சாலையின் நல்ல நிலையை உறுதி செய்வதற்காக, காலமுறை நடைபாதை பராமரிப்பு திட்டத்தின் கீழ் 55 பணிகளுக்கு மொத்தம் RM80 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.

மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் பணி ஆணை ஒப்புதல் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset