
செய்திகள் மலேசியா
கிரிக் பேருந்து விபத்து: விசாரணை முடியும் வரை ஓட்டுநரை அமைதியாக இருக்க அந்தோனி லோக் எச்சரிக்கை
கிரிக்:
15 உப்சி கல்வியியல் மாணவர்களின் உயிரைப் பறித்த கிரிக் பேருந்து விபத்து தொடர்பான சொந்த கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அப்பேருந்து ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேருந்தின் பிரேக் செயழிலந்தால் விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநர் கூறுவது இன்னும் நிரூப்பிக்கப்படவில்லை.
பயணம் செய்த பேருந்தின் பிரேக்கின் செயல்பாட்டைத் தற்போது புஸ்பகோமின் தொழில்நுட்ப சோதனை பிரிவு ஆய்வு செய்து வருகிறது.
ஓட்டுநர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அப்படி கூறுவதாகத் தாம் குறிப்பிடவில்லை.
இருப்பினும், புஸ்பாகோமின் சோதனைக்குப் பின்னரே ஓட்டுநரின் கூற்று உண்மையா பொய்யா என்று நிரூப்பிக்க முடியும் என்றார் அந்தோனி லோக்.
புஸ்பகோம் ஏற்கனவே பேருந்தின் பிரேக் சிஸ்டத்தில் ஒரு சோதனையை நடத்தியுள்ளது.
அதன் அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்று கிரிக் காவல் தலைமையகத்தில் விபத்தில் ஈடுப்பட்ட பேருந்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர் சந்திப்பில் அந்தோனி லோக் கூறினார்.
அதன் பின் விபத்து நிகழ்ந்து இடத்திற்கும் சென்று பார்வையிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am