நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2030ஆம் ஆண்டுக்குள் ஆசியான் பெரிய அளவிலான உலக பொருளாதார முன்னோடியாக விளங்கும்: தெங்கு ஸ்ப்ருல் நம்பிக்கை 

கோலாலம்பூர்: 

2030ஆம் ஆண்டுக்குள் ஆசியான் உலகில் நான்காவது சக்திவாய்ந்த பொருளாதார முன்னோடியாக விளங்கும் என்று அனைத்துலக வாணிப, முதலீட்டு, தொழிற்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் கூறினார். 

GDP வளர்ச்சி நிலையானது 4.0 முதல் 5.0 விழுக்காடு வரை வளர்ச்சி கண்டால் மட்டுமே ஆசியான் பொருளாதார சக்தியாக உருவெடுக்கும். 

நடப்பாண்டில் ஆசியானின் GDP குறியீடு என்பது 4.7 விழுக்காடாக உள்ளது. இந்த தகவலை ஆசியான் தலைமை செயலகம் வெளியிட்டது. 

AEC இன் வியூக திட்டமானது ஆசியானின் எதிர்காலத்தை எட்ட ஏதுவாக அமையும். இதனால் 2030ஆம் ஆண்டுக்குள் ஆசியான் வளர்ச்சி அடைந்த கூட்டமைப்பாக இருக்கும் என்று அமைச்சர் சொன்னார். 

இந்த தயார் நிலையானது ஆசியானின் உலகளாவிய ஈர்ப்பு, தரத்தை அதிகப்படுத்தும் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset