நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய ஊடகவியலாளர்கள் தினம் 2025 நாளை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது: மலேசிய தகவல், தொடர்பு அமைச்சு ஏற்பாடு 

கோலாலம்பூர்: 

HAWANA 2025 எனப்படும் தேசிய ஊடகவியலாளர்கள் தினம் 2025 நாளை வெகு சிறப்பாக தலைநகரில் உள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறவுள்ளது. 

உள்ளூர், அனைத்துலக அளவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மலேசிய தகவல், தொடர்பு அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியை மலேசிய தேசிய செய்தி நிறுவனமான BERNAMA வும் இணைந்து ஏற்பாடு செய்கிறது. 

சுமார் 20 ஊடக நிறுவனங்களின் முகப்புகள் அங்கு தயார் நிலையில் இருப்பதாகவும் JAPEN, MCMC, BERNAMA, RTM, BERNAMA RADIO, MYTV போன்ற ஊடகங்களின் செயல்திறன்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும் இது அமைக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் சனிக்கிழமை HAWANA 2025 நிகழ்ச்சியைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி டேவான் மெர்டேக்கா WTCKL பகுதியில் நடைபெறவுள்ளது. 

துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப், தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ டாக்டர் ஸலெஹா முஸ்தஃபா, தகவல், தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் ஆகியோர் வருகை தரவுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset