
செய்திகள் மலேசியா
படிக்க கட்டாயப்படுத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞன் சொந்த தாய், அண்ணனைக் கத்தியால் குத்தி கொலை செய்தான்
மலாக்கா:
படிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான 17வயது இளைஞன் ஒருவன் தனது சொந்த தாய், அண்ணனைக் கத்தியால் குத்தி கொலை செய்தான்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இன்று அதிகாலை புக்கிட் ரம்பாயில் உள்ள தாமான் ரம்பாய் முத்தியாராவில் நிகழ்ந்தது.
இவ்வாண்டு எஸ்.பி.எம் தேர்வை எழுதும் மாணவனான அந்த 17 வயதுடைய சந்தேக நபரைப் போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட 51 வயது மாது ஒருவர் சீனப்பள்ளி ஆசிரியை என்றும் மற்றொரு நபர் 21 வயது அண்ணன் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் கூறினார்.
மேலும், 13 வயது தனது சகோதரனைக் கொலை செய்ய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எஸ்.பி.எம் தேர்வுக்கு படிக்க சொல்லி தம்மை காட்டாயப்படுத்தி கொண்டே இருந்ததால் இந்த குற்றத்தைப் புரிந்ததாக அவ்விளைஞன் ஒப்புக்கொண்டான்
சிசிடிவி காமெரா மூலம் இந்த சம்பவம் தொடர்பாக ஆராயப்பட்டது. சந்தேக நபர் தான் பயனபடுத்திய கூர்மையான ஆயுதத்தை வீசியும் அதனை போலீசார் மீண்டும் கைப்பற்றினர்.
விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் நாளை மலாக்கா நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்படவுள்ளார். கொலை குற்றச்சாட்டு என வகை செய்யப்படும் குற்றவியல் சட்டம் 302இன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am