நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிற்கல்வி, தொழிற்பயிற்சி ஆணையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது: பிரதமர் அன்வார் தகவல் 

மலாக்கா: 

TVET எனப்படும் தொழிற்கல்வி, தொழிற்பற்சி திட்டத்தை மேலோங்க செய்ய அரசாங்கம் TVET COMMISION அல்லது தொழிற்கல்வி, தொழிற்பயிற்சி ஆணையம் ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

தொழிற்கல்வி, தொழிற்பயிற்சியின் மேம்பாட்டின் மேம்பாடு என்பது பெரும் வளர்ச்சியாகும். துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹிட் ஹமிடி தலைமையிலான தேசிய தொழிற்கல்வி, தொழிற்பயிற்சி மன்றம் சீரிய அடைவுநிலை கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

TVET துறையின் மேம்பாடு குறித்து அதன் மன்றம் கண்காணித்து வரும் அதேவேளையில் ஓர் ஆணையம் அமைக்க பரிந்துரைகளும் முன்மொழியப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

இன்று மலாக்கா ஆயிர் கெரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் தேசிய தொழிற்கல்வி, தொழிற்பயிற்சி தினத்தைத் தொடக்கி வைத்து பேசிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset