
செய்திகள் மலேசியா
போதைப்பொருள், போலி துப்பாக்கி வைத்திருந்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகளிலிருந்து யூசோஃப் ராவ்தர் விடுவிக்கப்பட்டார்
கோலாலம்பூர்:
போதைப்பொருள் கடத்தல், போலி துப்பாக்கி வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து பிரதமர் அன்வாரின் முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ராவ்தரை உயர்நீதிமன்றம் விடுவித்தது.
இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அரசு தரப்பு முதன்மையான ஆதராங்களைக் கொண்டு நிரூபிக்க தவறியதையடுத்து நீதிபதி ஜமீல் ஹுசேன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
யூசோஃப் போதைப்பொருள் கடத்தியதையும் போலி துப்பாக்கி வைத்திருந்ததையும் அரசுத் தரப்பு நிரூபிக்க தவறியதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள இனி வாதம் செய்ய தேவையில்லை என்று கூறி நீதிபதி அவரை இரு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு கோலாலம்பூர் போலீஸ் சூராவ் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் 305 கிராம் போதை பொருள் வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் யூசோஃப் போதை பொருள் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதே நாள் காலை 9.25 மணிக்கு ஜாலான் புக்கிட் கியாராவில் உள்ள செனாடா காண்டோமினியத்திற்கு வெளியே போலி துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am