நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் விவகாரம்: 2 நபர்கள் மீது குற்றம் சாட்டப்படும்

பாங்கி: 

சபா கனிம சுரங்க உரிம விவகாரம் தொடர்பான் ஊழலில் ஈடுப்பட்டுள்ள இரண்டு நபர்கள் விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறினார். 

பல சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழலில் ஈடுப்பட்டிருப்பதைக் காட்டும் காணொலி தொடர்பாக இருவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தினார்.

அது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று அவர் குறிப்பிட்டார். 

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

இந்த ஊழல் தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை எம்ஏசிசி நிறைவு செய்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset