நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

12 ஜூன் 1967:  மலேசிய நாணய வரலாற்றில் ஒரு மைல்கல்

கோலாலம்பூர்: 

58 ஆண்டுகளுக்கு முன், 12 ஜூன் 1967-ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் முதல் நாணயம், ரிங்கிட் அறிமும் செய்யப்பட்டது.

இது மலேசிய நாணய வரலாற்றில் மிக முக்கிய மைல்கலாகக் கருதப்படுகிறது. 

மலேசியா அதிகாரப்பூர்வமாக மலாயன் மற்றும் பிரிட்டிஷ் போர்னியோ டாலர்களுக்குப் பதிலாக ரிங்கிட்டை அறிமுகம் செய்தது.

மதிப்பு குறையாமல் அதே விகிதத்தில் மாற்றப்பட்டது. $1 மலாயன் டாலரின் மதிப்பு 1 ரிங்கிட்டாகும்.

இந்தப் புதிய நாணயத்தின் மதிப்பு மாறவில்லை மற்றும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வலுவாக உள்ளது என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. 

புதிய மற்றும் பழைய நாணயங்களுக்கு இடையிலான வேறுபாடு வடிவமைப்பின் அடிப்படையில் மட்டுமே இருந்தது. 

நாட்டின் பொருளாதாரத்தின் வலிமை, அதாவது நிலையான உள்ளூர் வருவாய் நிலை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்றுச் சேமிப்புகள் மிகுந்த அளவில் இருந்தது போன்ற காரணங்களால் மலேசிய நாணயத்தின் மதிப்பு நிலைத்திருந்தது. 

கடுமையான பாதுகாப்புகளுடன் இந்தப் புதிய பணம் லண்டனில் இருந்து போர்ட் ஸ்வெட்டன்ஹம், கிள்ளான், சிலாங்கூர் வழியாக மலேசியாவை வந்தடைந்தது.

ஷா ஆலம் பத்து தீகாவில் உள்ள தேசிய வங்கியின் நாணய அலுவலகத்தில் வைக்கப்பட்டது. 

1, 10, 15 மற்றும் 100 ரிங்கிட் நோட்டுகளில் நாட்டின் முதல் பேரரசர் Tuanku Abdul Rahman Ibni Almarhum Tuanku Muhammad-இன் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. 

1 சென், 5 சென், 10 சென், 20 சென் மற்றும் 50 சென் மதிப்புள்ள நாணயங்களில் நாடாளுமன்ற கட்டடம், பிறை நிலவும் 13 முனைகள் கொண்ட நட்சத்திரமும் அச்சிடப்பட்டிருந்து. 

மலேசிய நாணயங்களில் நிகழ்ந்த பரிமாற்றங்கள்: 

1. 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் RM1 நாணயம் அதிகாரப்பூர்வமாக புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக தேசிய வங்கி அறிவித்தது. 

2. மலேசியாவில் 2 ரிங்கிட் நோட்டு புழக்கத்திலிருந்து 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, 1996 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மூன்றாவது தொடர் (Third Series) நோட்டுகளின் வடிவமைப்பு மாற்றங்களுடன் தொடர்புடையது.

3. 1.  2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 1 சென் நாணயத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டு 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அது புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. 

காரணம்: 

அரசு, 1 சென் நாணய உற்பத்தியில் ஆண்டுக்கு RM14 மில்லியன் வரை இழப்பை சந்தித்தது.

1 சென் நாணயத்தை உருவாக்க 4.2 சென் செலவாகிய நிலையில் மாதம் 30 மில்லியன் 1 சென் நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 

அதில்  99% 1 நாணயங்கள் மீண்டும் தேசிய வங்கிக்குக் கிடைக்கப் பெறவில்லை என்று 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28-ஆம் தேதி தேசிய வங்கியின் துணை கவர்னர் Datuk Mohd. Nor Mashor தெரிவித்தார். 

4. 2011-ஆம் ஆண்டு தனித்துவமான மலேசியா என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வங்கி புதிய 5, 10, 20, 50 சென் நாணயங்களையும் 1,5,10,20,50,100 ரிங்கிட் நோட்டுகளையும் அறிமுகம் செய்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset