
செய்திகள் மலேசியா
சாலை சமிக்ஞை விளக்கை மோதி விபத்து: இரு இளைஞர்கள் பலி
குவாந்தான்:
சாலை சமிக்ஞை விளக்கை மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து நேற்றிரவு பகாங் மாநிலத்தின் தெமெர்லோவில் உள்ள ஜாலான் தெங்கு இஸ்மாயில் பகுதியில் நிகழ்ந்தது.
சாலை சமிக்ஞை விளக்கை பார்த்து நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கார் ஒன்று வேகமாக வந்து மோதி தள்ளியது
PERODUA BEZZA ரக கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்து மோதியது. முதற்கட்ட விசாரணையில் இது தெரிய வந்ததாக தெமெர்லோ மாவட்ட காவல்துறை தலைவர் மஸ்லான் ஹசான் கூறினார்.
இருவரும் மரணமடைந்த நிலையில் உடற்கூறு ஆய்வுக்காக உடல்கள் சுல்தான் ஹஜி அஹ்மத் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் சொன்னார்.
கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த காரிலிருந்து போதைப்பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் 1952 அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் செக்ஷன் 39Bஇன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am