நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர்க்கல்வி துறையில் உருமாற்றத்தை கொண்டு வர சொமாலியா நாட்டிற்கு மலேசிய உயர்க்கல்வி அமைச்சு உதவி செய்யும்: டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி 

புத்ராஜெயா: 

உயர்க்கல்வி துறையில் உருமாற்றத்தைக் கொண்டு வர சொமாலியா நாட்டிற்கு மலேசிய உயர்க்கல்வி அமைச்சு உதவி செய்யும் என்று நாட்டின் உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் கடீர் கூறினார். 

மலேசியாவிடமிருந்து மனிதவள ஆற்றல், மேற்கல்வி பயிலும் மாணவர்கள், விரிவுரையாளர்களின் கல்வி அறிவு பரிமாற்றம் ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. 

உயர்க்கல்வி அமைச்சின் மூலமாக மலேசியா தகுதி நிறுவனம் இணைந்து சொமாலியா நாட்டின் பாடத்திட்டங்களை மதிப்பாய்வு செய்யவும் கல்விக்கான தலைமை மேம்பாடு குறித்தும் பணியாற்ற மலேசியா தயாராக உள்ளது. 

சொமாலியா மாணவர்கள் மலேசியாவிற்கு வருகை தந்து மேற்கல்வியைத் தொடர வேண்டும். மலேசியாவில் சொமாலியா மாணவர்கள் மேற்கல்வி பயிலும் பட்டதாரிகள் திட்ட விசாவின் மூலம் வருகை தர வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது. 

முன்னதாக, புத்ராஜெயாவில் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் சொமாலியா நாட்டின் கல்வி, கலாச்சார, உயர்க்கல்வி அமைச்சர் ஃபரா ஷேக் அப்துல் கடீர்,  சொமாலியா குடியரசின் வெளிவிவகார துறை அமைச்சர் அலி முஹம்மத் ஒமார் ஆகியோர் அமைச்சர் ஸம்ரி அப்துல் கடீரைச் சந்தித்து பேசினர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset