நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயா இந்திய அரசு ஊழியர்கள் சங்கம் IMAIYAM பிரதிநிதிகள் துணையமைச்சர் தியோ நீ சிங்கை சந்தித்தனர்

கோலாலம்பூர்: 

புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயாவில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட இந்திய அரசு ஊழியர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஒற்றுமை, சிறந்த தொழில்முறை மற்றும் இந்திய அரசு ஊழியர்கள் நலனை வலுப்படுத்துவதில் இவர்களின் முயற்சி அர்த்தமுள்ளதாக உள்ளது என்று தகவல், தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார். 

மேலும், தங்கள் உறுப்பினர்களை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்த இவர்கள் விருப்பம் கொண்டுள்ளனர். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பல முக்கியமான முயற்சிகளை இமயம் தற்போது திட்டமிட்டு வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

கூடுதலாக, ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பரந்த அளவிலான தொடர்புத் திட்டங்களை செயல்படுத்துவதோடு, அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.

இந்த உன்னத முயற்சியை நான் வரவேற்கிறேன். மேலும் எனது நாடாளுமன்றத் தொகுதியான கூலாயில் அரசாங்க வேலை வாய்ப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள அராசங்க முயற்சிகள் பற்றிய அறிவிப்பை இன்னும் விரிவுபடுத்துவதோடு, ஆர்.டி.எம்-மின் - மின்னல் எப்.எம் மற்றும் தொலைக்காட்சி இரண்டில் ஒளியேறும் வசந்தம் போன்ற நிகழ்ச்சிகளில் இத்தகவல்கள் மக்களுக்கு அதிகமாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தேன் என்று தியோ நீ சிங் குறிபிட்டார். 

முன்னதாக, புத்ராஜெயாவில் இமயம் அமைப்பு பிரதிநிதிகளுடன் துணையமைச்சர் தியோ நீ சிங் சந்திப்பு நடத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset