நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2024 ஆம் ஆண்டிற்கான மலேசியாவின் மிகச் சிறந்த மாநிலமாக சபா தேர்வு 

பெட்டாலிங் ஜெயா: 

2024 ஆம் ஆண்டிற்கான மலேசியாவின் மிகச்சிறந்த மாநிலமாகத் 2025-ஆம் ஆண்டின் சர்வதேச வணிக மதிப்பாய்வு (IBR) ஆசியான் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக இந்த விருது சபா மாநிலத்திற்கு கிடைத்துள்ளதாகவும் மாநில அரசின் தலைமைத்துவமே முதன்மை காரணம் என்று பெத்தாகாஸ் சட்டமன்ற முன்னாள் உறுப்பினார்  ஜேம்ஸ் லிகுஞ்சாங் கூறியுள்ளார். 

மாநில முதல்வர் ஹஜிஜி நோரின் தலைமையின் கீழ், சபா மாஜு ஜெயா மேம்பாட்டு கட்டமைப்பை செயல்படுத்தியதற்காக சபா மாநிலம் இந்த உயர்ந்த கௌரவத்தைப் பெற்றதாக லிகுஞ்சாங் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த கட்டமைப்பு நான்கு முதன்மை அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளது: 

சபா மாநில உரிமைகளை ஆதரிப்பது, நேர்மை மற்றும் செயல்திறனுடன் வழிநடத்துவது, செழிப்பான தொலைநோக்கு 2030, மாநிலத்தின் பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமையைப் பேணுதல் ஆகியவை அந்த நான்கு  நான்கு முதன்மை அம்சங்களாகும். 

2022-ஆம் ஆண்டில் RM26 மில்லியனிலிருந்து 2025 ஆம் ஆண்டில் RM600 மில்லியனாக மாநிலத்தின் வருவாய் அதிகரித்துள்ளது. 

மொத்த வருவாயில்  47% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கிடைக்கப்பெற்றது. 

பெரிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் பான்-போர்னியோ நெடுஞ்சாலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை மாநிலத்தின் முக்கிய சாதனையாக லிகுஞ்சாங் மேற்கோள் காட்டினார்.

வெளிநாட்டு முதலீடுகள் 2023 இல் RM132.7 மில்லியனிலிருந்து 2024 இல் RM1.07 பில்லியனாக உயர்ந்துள்ளன.

மேலும் கோத்தா கினபாலு தொழில்துறை பூங்காவின் சாதனை அளவிலான அதிக ஆக்கிரமிப்பு விகிதம் 90% ஆகவும், 288 செயலில் உள்ள முதலீட்டாளர்களுடன் பாராட்டப்பட்டது.

சபா 2023-ஆம் ஆண்டில் 4.4% மலேசியாவில் மிக உயர்ந்த உற்பத்தித் துறை வளர்ச்சி விகிதத்தை அடைந்த மாநிலமாக திகழ்ந்துள்ளது என்று லிகுஞ்சாங் கூறினார்.

அதிகாரப்பூர்வ விருது வழங்கும் விழா ஜூலை 19 அன்று கோத்தா கினபாலுவில் உள்ள சபா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset