
செய்திகள் மலேசியா
காரிலிருந்து விழுந்த பணப்பை: மீண்டும் கார் ஓட்டுநரிடம் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டு
கோலாலம்பூர்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் நிலையத்தில் எண்ணெய்யை நிரப்பி விட்டு அங்கிருந்து செல்லும் போது தவறுதலாக காரிலிருந்து விழுந்த பணப்பை ஒன்றை ஆடவர் ஒருவர் மீண்டும் அந்த கார் ஓட்டுநரிடம் ஒப்படைத்துள்ளார்.
எண்ணெய் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் சென்றவுடன் பணப்பை தவறி விழுந்ததை அவர்கள் அறிந்தனர்.
சாலையில் விழுந்த பணப்பையை ஆடவர் ஒருவர் எடுத்து அடையாள அட்டையை பார்த்து சரியான நபரிடம் ஒப்படைத்தார்.
இவரின் இந்த செயல் நெட்டிசன்கள் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
அவ்வாடவரின் நேர்மையையும் பெருந்தன்மையையும் மக்கள் பலர் பாராட்டி கருத்து பதிவிட்டனர்.
யார் என்று தெரியாத நபர் ஆபத்தான வேளையில் உதவி செய்தது பெரும் இரக்க குணம் படைத்தவராக இருப்பதாக அந்த கார் ஓட்டுநரின் மனைவி சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am