
செய்திகள் மலேசியா
70% அதிக எடையை ஏற்றியதே விபத்திற்கு காரணம்: முதற்கட்ட விசாரணை அறிக்கையில் விளக்கம்
பெட்டாலிங் ஜெயா:
லாரியில் 70% அதிக எடையை ஏற்றியதே விபத்திற்கு காரணம் என்று கடந்த மாதம் அரச மலேசிய காவல்படையின் சேமப்படை ஊழியர்களை உட்படுத்திய விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமப்படை ஊழியர்கள் பயணம் செய்த வாகனத்தை மோதிய லாரி பாதுகாப்பு அம்சத்திலும் செயல்பாட்டு நடைமுறைகளிலும் அலட்சியமாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த சமயத்தில் லாரி 40,960 கிலோ சரளைக் கற்களை ஏற்றிச் சென்றுள்ளது.
இது அனுமதிக்கப்பட்ட எடை கட்டுப்பாட்டை விட 70.67% அதிக என்று போக்குவரத்து அமைச்சு கூறியது.
கனரக லாரி சாலைப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு மற்றும் பாதுகாப்பு தணிக்கையில் 15% மட்டுமே மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் ஏழு கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மீறியதும் கண்டறியப்பட்டது.
டாஷ்வீன் டிரேடிங்-க்குச் சொந்தமான இந்த லாரி பாதுகாப்பு மேற்பார்வையாளர் இல்லை.
இந்நிலையில், சேமப்படை ஊழியர்கள் பயணம் செய்த வாகனத்தில் முன் மற்றும் பின் இருக்கைகளுக்கு சீட் பெல்ட் இல்லாததும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் சேமப்படை ஊழியர்களுக்குக் கடுமையான காயமும் இன்னும் சிலர் மரணிப்பதற்கும் காரணம் அமைந்தன.
லாரி பின்புற பகுதியில் பொருட்கள் மற்றும் பயணிகள் என கலவையான சுமைகளை ஏற்றிச் செல்வதையும், மோதல் ஏற்பட்டால் பயணிகளுக்கு காயம் ஏற்படும் அபாயத்தை மேலும் அதிகரிப்பதையும் கண்டறிந்தது.
முன்னதாக, கடந்த மே 13-ஆம் தேதி சேமப்படை ஊழியர்களை ஏற்றி சென்ற வாகனம் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 9 சேமடைப்படை ஊழியர்கள் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am