நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது: தலைமை புள்ளிவிவர நிபுணர் 

புத்ரா ஜெயா:

மலேசியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக  தலைமை புள்ளிவிவர நிபுணர் Datuk Seri Dr Mohd Uzir Mahidin தெரிவித்தார்.

நாட்டில் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 3.1% ஆக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 3% ஆகக் குறைந்துள்ளது.

இது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவு என்று புள்ளிவிவரத் துறை வெளியிட்ட ஏப்ரல் மாதத்திற்கான மலேசிய தொழிலாளர் குழுவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதத்தில் 529,600 பேர் வேலையின்மை சிக்கலை எதிர்நோக்கியிருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இதன் எண்ணிக்கை 525,900 ஆக குறைந்திருப்பதை Datuk Seri Dr Mohd Uzir Mahidin சுட்டிக் காட்டினார். 

நாட்டின் நம்பிக்கைக்குரிய பொருளாதார நிலையே இதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அதே நேரத்தில் வேலையின்மை தொடர்ந்து குறைந்து வருகிறது என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், தங்குமிடம், உணவு மற்றும் பான சேவைகள்,போக்குவரத்து உற்பத்தி, கட்டுமானம், விவசாயம், சுரங்கம் மற்றும் குவாரி துறைகளாலும் நாட்டின் வேலையின்மை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

15 முதல் 24 வயதுடைய இளைஞர்களின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 10.3% ஆக நிலையாக இருந்தது. 

298,300 வேலையற்ற இளைஞர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset