
செய்திகள் மலேசியா
மித்ராவின் பள்ளி மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு திட்டம் 80,000 மாணவர்களை இலக்காக கொண்டுள்ளது: பிரபாகரன்
கோலாலம்பூர்:
மித்ராவின் பள்ளி மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு திட்டம் 80,000 மாணவர்களை இலக்காக கொண்டுள்ளது.
மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் ப. பிரபாகரன் இதனை கூறினார்.
இணைய அச்சுறுத்தல் என்பது நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை இந்த இணைய அச்சுறுத்தலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இப் பிரச்சினைக்கு தீர்வு காண பள்ளி மாணவர்களிடையே இணைய பாதுகாப்பு குறித்து முழு விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு திட்டத்தை மித்ரா அறிமுகம் செய்துள்ளது.
இத் திட்டத்தின்கீழ் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி என மொத்தம் 500 பள்ளிகளில் இத் திட்டம் மேற்கோள்ளப்படவுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 80,000 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
மலேசிய சைபர் செக்கியிரூட்டி, கல்வியமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, இணைய அச்சுறுத்தல்கள், இணைய பகடிவதைகள் உட்பட அனைத்தும் மாணவர்களுக்கு போதிக்கப்படும். ஆக இத் திட்டம் மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.
செந்தூல் தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியில் நடந்த இத் திட்டத்தின் அறிமுக விழாவில் பேசிய பிரபாரன் இதனை கூறினார்.
பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலேஹா முஸ்தாபா இத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am