நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?

வார்சா:

பயிற்சியாளர் மைக்கேல் புரோபியர்ஸுடனான தகராறு, கேப்டனின் கைப்பட்டை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து போலந்து தேசிய அணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை தொடர்ந்து  லெவன்டோவ்ஸ்கி சில நாட்கள் பரபரப்பாக இருக்கிறார்.

அதே வேளையில் 36 வயதான அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக இந்த வாரம் தனது தாய்நாட்டிற்குத் திரும்பினார்.

லெவன்டோவ்ஸ்கி நேற்று புதன்கிழமை வார்சா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவரது முன்னாள் வணிக கூட்டாளியும் முன்னாள் முகவருமான செசரி குச்சார்ஸ்கியுடன் ஆர்.எல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்நிலையில் கடந்த வார இறுதியில் பயிற்சியாளர் மைக்கேல் ப்ரோபியர்ஸ், லெவன்டோவ்ஸ்கியின் கேப்டன் பதவியை நீக்கினார்.

 இது அணி, ஊழியர்களால் ஆதரிக்கப்பட்ட முடிவு என்றும், அவர் டிரஸ்ஸிங் அறைக்குள் இருக்கும் சூழ்நிலையை எதிர்மறையாக பாதித்துள்ளதாக அவர்கள் கருதுவதாகவும் கூறினார்.

பின்லாந்திடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் பயிற்சியாளர் புரோபியர்ஸின் நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.

இதனால் போலந்து அணி உலகக் கிண்ண தகுதிப் பிரிவில் பின்தங்கியுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset