நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்

ஜகார்த்தா: 

இறந்த சடலத்துடன் பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தோனேசியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டின் நுசா தெங்காரா பாராட் பிராந்தியத்தின் டொம்பு நகரில் நிகழ்ந்தது 

சாலை விபத்தில் உயிரிழந்த வருங்கால கணவர் சடலமாக இருந்த நிலையில் அவரை அப்பெண் திருமணம் செய்து கொண்டார். 

சடலத்தின் அருகில் அமர்ந்து கொண்ட அந்த பெண் இந்த திருமணத்தைச் செய்து கொண்டார். திருமணம் நடத்துபவர் இந்த வைபவத்தை நடத்தி முடித்தார். 

திருமணம் செய்து கொண்டதாக காணொலி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த காணொலி பதிவு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

கடந்த வாரம் இந்த திருமண வைபவம் நடைபெற்றதாகவும் அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் டொம்பு காவல்துறை தலைவர் AKP ZUHARIS கூறினார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset