நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மேசையின் மேல் ஏறி நின்ற ஆசிரியர்: மாணவனின் தலையைப் பலமுறை உதைத்தார் 

ஜகார்த்தா: 

இந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவா பிராந்தியத்தின் டெமாக் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் ஆசிரியர் ஒருவர் மேசையின் மேல் ஏறி நின்று வகுப்பறையில் உள்ள மாணவனின் தலையை உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று SMP NEGERI 1 KARANGAWEN எனும் பள்ளியில் நிகழ்ந்தது. 

ஆசிரியரின் இந்த நடவடிக்கையானது டிக்டாக் சமூக ஊடகத்தின் MATAJATENG எனும் கணக்கில் காணொலியாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. 

சம்பந்தப்பட்ட ஆசிரியர் உரத்த குரலில் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பியதோடு மேசையின் மேலே நின்றார். 

மேலும், மாணவர் ஒருவரின் தலையைப் பலமுறை உதைத்துள்ளார். இந்த காணொலியைப் பார்த்த பிறகு நெட்டிசன்கள் பலர் தங்களின் அதிருப்தியினைத் தெரிவித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset