நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எருக்கலம்பிட்டியில் மூன்று நாள் ஹஜ் விழா: கால்பந்தாட்டத்தை துவக்கி வைத்தார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

எருக்கலம்பிட்டி:

முன்னாள் வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம்  நூர்தீன் மஷூரின் நினைவாக, அவரது ஊரான எருக்கலம் பிட்டியில்  15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10), முன்னாள்  மன்னார் பிரதேச சபை தலைவர் இஸ்மாயில் இஸ்ஸதீனின் ஏற்பாட்டில், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் தலைமையில், ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன்  விமர்சையாக நடைபெற்ற போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

அவர் உதைப்பந்தாட்டப் போட்டியையும் கண்டு ரசித்தார்.

அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தமுஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை, முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் ஃபாருக் ஆகியோர் உட்பட மற்றும் முக்கியஸ்தர்களும் , விளையாட்டு, கலை,கலாசார ஆர்வலர்களும் இந் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

மூன்று நாட்கள் நடந்த பிரஸ்தாப விழாவில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. விழாவை ஏற்பாட்டுக் குழுவினர்கள் சிறப்பாக ஒழங்கு 
செய்திருந்தனர்.

- ஏ ஆர் ஏ ஹஃபீஸ்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset