நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங்கில் மின்னியல் சிகரெட் பயன்பாட்டிற்கு தடை: மாநில அரசு அறிவிப்பு

குவாந்தான்: 

பகாங் மாநிலத்தில் வேப் எனப்படும் மின்னியல் சிகரெட் பயன்பாட்டிற்கு மாநில அரசு தடை விதித்துள்ளதாக அம்மாநில இஸ்லாமிய மத விவகாரங்கள், கிராமப்புற மேம்பாடு மற்றும் பூர்வக் குடிமக்கள் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் Datuk Seri Syed Ibrahim Syed Ahmad தெரிவித்தார். 

மாநில அரச முத்திரை காப்பாளர் ( Mufti) அலுவலகம் மின்னியல் சிகரெட் பயன்பாட்டைத் தடை செய்யும் ஃபத்வாவைப் பிறப்பித்துள்ளதாக Syed Ibrahim குறிப்பிட்டார். 

மின்னியல் சிகரெட் பயன்பாட்டைத் தடை செய்ய கோரி மந்திரி பெசார் அலுவலகம் மார்ச் 3-ஆம் தேதி பகாங் மாநில சட்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியது. 

அதன் பின் மே 14-ஆம் தேதி பகாங் மாநில நிர்வாகக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

மேலும் பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா இதற்கு ஒப்புதல் வழங்கியதாக சுல்தான் அஹமத் ஷா நிர்வாக மையத்தில் நடந்த மாநில இஸ்லாமிய மத விவகார துணைக் குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset