நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜெனிவாவிற்கு வெளியே முதல் அமைத்துலக திறன் மாநாட்டை அக்டோபரில் மலேசியா ஏற்று நடத்தவுள்ளது : ஸ்டீவன் சிம்

ஜெனிவா:

ஜெனிவாவிற்கு வெளியே முதல் அமைத்துலக திறன் மாநாட்டை அக்டோபர் மாதத்தில் மலேசியா ஏற்று நடத்தவுள்ளது,

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

ஆசியான் திறன் ஆண்டு முன்முயற்சியின் ஒரு பகுதியாக ஜெனிவாவிற்கு வெளியே நடைபெறும் முதல் அனைத்துலக  திறன் மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தவுள்ளது.

ஜெனிவாவில் அனைத்துலக தொழிலாளர் அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு உயர்மட்ட நிகழ்வுக்கு அமைச்சர் இதனை கூறினார்.

இம்மாநாடு வரும்  அக்டோபர் மாதம்  22, 23ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெறும்.

2025ஆம் ஆண்டு ஆசியான் தலைவராக நாட்டின் பங்கையும், தொழிலாளர் மாற்றம், தொழிலாளர் சந்தை சீர்திருத்தம்,  மனித மூலதன மேம்பாட்டில் அதன் அதிகரித்து வரும் முக்கிய தலைமையை இது பிரதிபலிக்கிறது.

இம்மாநாடு என்பது எதிர்காலத் திறன்களைப் பற்றியது மட்டுமல்ல, அது நியாயத்தைப் பற்றியது.

நீங்கள் ஹனோயில் ஒரு நிரலாளராக இருந்தாலும் சரி, ஜாகர்த்தாவில் டெலிவரி டிரைவராக இருந்தாலும் சரி, கோலாலம்பூரில் ஒரு தொழிற்சாலை ஊழியராக இருந்தாலும் சரி, உங்கள் பணி மரியாதைக்குரியது.

உங்கள் பாதுகாப்பு பாதுகாக்கப்பட வேண்டும், உங்கள் திறமைகள் முதலீடு செய்யப்படத் தகுதியானவை என்று அவர் கூறினார்.

நாட்டின் இணைய கற்றல் தளமான e-LATIH இன் உலகளாவிய விரிவாக்கத்தையும் அமைச்சர் அறிவித்தார்.

இது இப்போது உலகெங்கிலும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் திறன்-மேம்படுத்தல் மற்றும் தழுவல் உள்ளடக்கத்திற்கான இலவச, எல்லையற்ற அணுகலை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset