செய்திகள் மலேசியா
பிரபலமானவர்கள் விபத்தில் சிக்கும் வரை காத்திருக்காமல் சாலைகளை மேம்படுத்துங்கள்: முஹம்மத் கைரூடின்
கோலாலம்பூர்:
பிரபலமானவர்கள் விபத்தில் சிக்கும் வரை காத்திருக்காமல் சாலைகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும்.
அம்னோ உலமா மன்றத்தின் துணைத் தலைவர் முஹம்மத் கைருடின்ன் அமான் ரசாலி இதனை வலியுறுத்தினார்.
பிரபலமானவர்கள், தேசிய நலன்களைக் கொண்டவர்கள் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நெடுஞ்சாலையில் விபத்துகளை ஏற்படுத்தும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
கடந்த திங்கட்கிழமை உப்சியின் 15 மாணவர்கள் கொல்லப்பட்ட விபத்தைத் தொடர்ந்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மிகவும் அவசரமாக விவரித்த அவர், சாலையில் வாகனம் ஓட்டும்போது விபத்தில் சிக்கிய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
ஜெலியில் இருந்து தொடங்கி கிரிக்கில் முடியும் ஜாலான் ராயா திமூர் - பாரத்தில் வாகனம் ஓட்டும் பயனர்கள், இந்த பாதை விபத்துகளுக்கு அதிக ஆபத்தில் உள்ளது.
குறிப்பாக தெரு விளக்குகள் இல்லாத இருண்ட சூழலில் இரவில் வாகனம் ஓட்டினால் மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 5:35 pm
