நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 தேசிய தினம் கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறும்: தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

2025ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறும் என்று தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அறிவித்தார். 

கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் தேசிய தின கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் கொண்டாடப்படவிருக்கிறது. 

அதுமட்டுமல்லாமல், 2025 மலேசிய தின கொண்டாட்டம் இவ்வாண்டு பினாங்கு மாநிலத்தில் நடைபெறவுள்ளது. 

மேலும், எதிர்வரும் ஜூலை 27ஆம் தேதி மூவாரில் உள்ள தஞ்சோங் எமாஸ் பகுதியில் தேசிய கொடி பறக்கவிடும் தினமும் தேசிய தின கொண்டாட்ட அறிமுக விழாவும் நடைபெறும் என்று சற்று முன் டத்தோ ஃபஹ்மி அறிவித்தார்.

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset