நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனரக வாகனங்களுக்கான கட்டாய வேக கட்டுப்பாட்டு நடைமுறை விபத்தைக் குறைக்க உதவும்: வல்லுநர்கள் கருத்து 

கோலாலம்பூர்: 

கனரக வாகனங்களுக்கான கட்டாய வேக கட்டுப்பாட்டு நடைமுறை விபத்தைக் குறைக்க உதவும். அதேவேளையில், பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த இது கைகொடுக்கும் என்று மலேசிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முஹம்மத் ஹைரோல் அஸ்மான் கூறினார். 

வேக கட்டுப்பாட்டை கட்டாயமாக்கப்படும் பட்சத்தில் விபத்தைத் தவிர்க்கும் அதேவேளையில் பாதிப்பை 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை குறைக்க முடியும் என்று அவர் சொன்னார். 

கனரக வாகனங்களுக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் வரை மணிக்கு பயணம் செய்ய ஏதுவாக இருப்பதால் விபத்தைக் குறைக்க முடியும். 

கடந்தாண்டு முதல் காலாண்டில் கனரக வாகனங்களை உட்படுத்தி 287 சாலை விபத்து மரணங்கள் பதிவு செய்யப்பட்டது. 

வேக கட்டுப்பாட்டை கனரக வாகனங்கள் மீது விதிமுறைகள் மேற்கொள்வதால் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் லாவ்  தெய்க் ஹுவா கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset