
செய்திகள் மலேசியா
பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்ய தடையா? உயர்க்கல்வி அமைச்சர் விளக்கம்
கோலாலம்பூர்:
சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்வதற்கு தடை விதிப்பது உட்பட இன்னும் பல பரிந்துரைகளை உயர்க்கல்வி அமைச்சகம் பெற்றுள்ளதாக அதன் அமைச்சர் Datuk Seri Zambry Abd Kadir தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 15 உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து சில தரப்பினர்களிடமிருந்த இந்தப் பரிந்துரைகள் பெறப்பட்டதை Zambry உறுதிப்படுத்தினார்.
பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்வதற்குப் பதிலாக பகலில் பயணம் செய்வதை உயர்க்கல்வியமைச்சகம் கட்டாயமாக்கலாம் என்றூம் சிலர் தெரிவித்துள்ளதாக Zambry குறிப்பிட்டார்.
இது மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
பரிந்துரைகள் முறையாக ஆலோசிக்கப்பட்ட பின் முறையான நடவடிக்கைகளை உயர்க்கல்வியமைச்சகம் முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm