நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Jetstar Asia விமானச் சேவை நிறுத்தப்படுகிறது: 500 ஊழியர்கள் பணி இழக்கிறார்கள் 

சிங்கப்பூர்:

Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் 500க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

அந்தத் தகவலை Jetstar Asia பேச்சாளர் தெரிவித்தார்.

ஊழியர்களுக்குப் பணிநீக்க இழப்பீடும் வேலை ஆதரவுச் சேவைகளும் வழங்கப்படும்.

குழுமத்திலும் மற்ற விமான நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புத் தேடித் தர Qantas முயல்கிறது.

ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்திற்குச் சொந்தமான Jetstar Asia சிங்கப்பூரிலிருந்து இயங்குகிறது.

Jetstar Asia அடுத்த மாதம் (ஜூலை) 31ஆம் தேதி செயல்பாடுகளை நிறுத்துகிறது.

Jetstar Asia அடுத்த 7 வாரங்களுக்குத் தொடர்ந்து விமானச் சேவைகளை வழங்கும்.

அதற்குப் பிந்திய தேதிகளில் ஏற்கனவே விமானச்சீட்டு வாங்கிய வாடிக்கையாளர்களுக்குப் பணம் முழுமையாகத் திருப்பிக் கொடுக்கப்படும்.

Jetstar பற்றுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் மாதம் தொடர்புகொள்ளப்படுவர். அவர்களுக்குப் பற்றுச்சீட்டுக்கு ஈடான பணம் வழங்கப்படும்.

ஆசியாவில் 16 விமானப் பாதைகள் பாதிக்கப்படும் என்று Qantas சொன்னது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லந்து, பிலிப்பீன்ஸ், சீனா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு Jetstar Asia விமானச் சேவை வழங்குகிறது.

ஆதாரம்: CNA 
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset