செய்திகள் உலகம்
Jetstar Asia விமானச் சேவை நிறுத்தப்படுகிறது: 500 ஊழியர்கள் பணி இழக்கிறார்கள்
சிங்கப்பூர்:
Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் 500க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.
அந்தத் தகவலை Jetstar Asia பேச்சாளர் தெரிவித்தார்.
ஊழியர்களுக்குப் பணிநீக்க இழப்பீடும் வேலை ஆதரவுச் சேவைகளும் வழங்கப்படும்.
குழுமத்திலும் மற்ற விமான நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புத் தேடித் தர Qantas முயல்கிறது.
ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்திற்குச் சொந்தமான Jetstar Asia சிங்கப்பூரிலிருந்து இயங்குகிறது.
Jetstar Asia அடுத்த மாதம் (ஜூலை) 31ஆம் தேதி செயல்பாடுகளை நிறுத்துகிறது.
Jetstar Asia அடுத்த 7 வாரங்களுக்குத் தொடர்ந்து விமானச் சேவைகளை வழங்கும்.
அதற்குப் பிந்திய தேதிகளில் ஏற்கனவே விமானச்சீட்டு வாங்கிய வாடிக்கையாளர்களுக்குப் பணம் முழுமையாகத் திருப்பிக் கொடுக்கப்படும்.
Jetstar பற்றுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் மாதம் தொடர்புகொள்ளப்படுவர். அவர்களுக்குப் பற்றுச்சீட்டுக்கு ஈடான பணம் வழங்கப்படும்.
ஆசியாவில் 16 விமானப் பாதைகள் பாதிக்கப்படும் என்று Qantas சொன்னது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லந்து, பிலிப்பீன்ஸ், சீனா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு Jetstar Asia விமானச் சேவை வழங்குகிறது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
இந்தோனேசியாவில் நிலச்சரிவு, கடும் வெள்ளம்: 16 பேர் பலி
November 26, 2025, 7:24 am
