நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதினொரு மலேசிய யாத்ரீகர்கள் புனித நகரில் மரணமடைந்துள்ளனர்: சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நயிம் மொக்தார் தகவல் 

மக்கா: 

ஹஜ் புனித பயணத்திற்குச் சென்றுள்ள மலேசிய யாத்ரீகர்களில் 11 பேர் மரணமடைந்துள்ளதாக சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நயிம் மொக்தார் கூறினார். 

கடந்த ஜூன் 9ஆம் தேதி மலேசிய பெண் யாத்ரீகர் ஒருவர் இருதய நோயால் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கமும் தாபோங் ஹஜி வாரியமும் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டன. 

சம்பந்தப்பட்ட மாது இறந்த தகவலானது அவரின் வாரிசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

இதுவரை 10 மலேசியர்கள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த வேளையில் ஒருவர் மட்டும் உடல் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset