நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் தேவை: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

அரசாங்க நிர்வாகத்தில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் தேவை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இந்தச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள பிகேஆர் கட்சியின் ஆதரவு மட்டும் போதாது. 

மாறாக, ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவும் தேவை என்று பிரதமர் குறிப்பிட்டார். 

பிதமராக அரசாங்கத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக அவர் கூறினார்.

சீர்திருத்தத்தை ஒரு வருடத்தில் அல்லது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ள இயலாது என்றார் அவர். 

ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும், சில முன்னேற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்று அவர் விளக்கமளித்தார். 

பொறுமையற்றவர்கள் தான் உடனடி சீர்த்திருத்தை எதிர்ப்பார்ப்பார்கள் என்றும் அது சாத்தியப்படாது என்றும் அன்வார் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset