நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அலாம் ஷா அறிவியல் இடைநிலைப்பள்ளியின் நிர்வாக கட்டிடத்தில் தீ விபத்து: சேதம் குறித்து மதிப்பாய்வு நடத்தப்படும் 

கோலாலம்பூர்: 

செராஸில் உள்ள அலாம் ஷா அறிவியல் இடைநிலைப்பள்ளியின் நிர்வாக கட்டிடத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் சேதம் குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார். 

இந்த மதிப்பாய்வு நிறைவுபெற்றவுடன் பாதிக்கப்பட்ட தரப்பு அமைச்சிடம் உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். 

இன்று அதிகாலையில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவொரு உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது 

அமைச்சு சார்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று அவர் சொன்னார். 

முன்னதாக, இன்று அதிகாலை 4.15 மணிக்கு SM SAINS ALAM SHAH இடைநிலைப்பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  அந்த தீ விபத்து பள்ளியின் நிர்வாக கட்டிடத்தில் நிகழ்ந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset