நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு மாநில எல்.ஆர்.டி விவகாரத்திற்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தகவல் 

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கு மாநிலத்தை உட்படுத்திய எல்.ஆர்.டி ரயில் சேவை விவகாரத்திற்குச் சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டு விட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். 

எல்.ஆர்.டி முத்தியாரா வழித்தடம் தொடர்பாக பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கொன் இயோ உடன் சந்திப்பு ஒன்று கடந்த மாதம் நடந்ததாக லோக் சொன்னார். 

மாநில அரசாங்கத்திடமிருந்து ஓர் அனுமதி கடிதம் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு பிறகு தீர்வு காணப்பட்டது. 

இயற்பியல் சார்ந்த பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று லோக் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார். 

எல்.ஆர்.டி முத்தியாரா வழித்தடம் என்பது 29.5 கிலோமீட்டரை உட்படுத்திய ஓர் இரயில் சேவையாகும். இதில் 21 நிலையங்கள் உட்படுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset